கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டாங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமான், சந்தீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரியாஸ், மித்து, கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.