கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி இலக்கம்பட்டி பெருமாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார் ராமசாமி ஆகியோர் பழனியை வழிமறித்து மது வாங்குவதற்கு பணம் கேட்டனர்.

அதற்கு பழனி தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ராமசாமியும், குமாரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமார் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.