வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவட்டம் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மாள்(90) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி பூஜை செய்வதற்காக பாப்பம்மாள் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.