திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காந்திநகரில் உதய பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று வந்த போது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இளம்பெண் தன்னுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்து அடிக்கடி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இளம்பெண் உதய பாஸ்கருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் உதய பாஸ்கர் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னுடன் தனிமையில் இருக்கவில்லை என்றால் வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அதே நேரத்தில் இளம் பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் ஒன்று திரண்டு உதய பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனக்கு திருமணமானதை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.