திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம்புதூர்- சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சாலையில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பழனி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். அப்போது சிந்தலபாடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், செயலர் செல்லமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.