திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலிக்குமாறு கண்ணன் அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர்.