கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.