புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிச்சதாம்பட்டி நரிப்பள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு அஞ்சலி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் கீழநாஞ்சூரில் இருக்கும் செல்வகுமாரின் சகோதரி முத்துலட்சுமி வீட்டிற்கு சென்று வந்தனர். இதனையடுத்து அஞ்சலி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தீக்காயங்களுடன் இருந்த அஞ்சலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஞ்சலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.