பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ரவிச்சந்திரனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.