கடலூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரத்தனூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜா(23) ஊருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்தார். ஆனால் நீச்சல் தெரியாததால் ராஜா தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராஜாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.