தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பை தாண்டி தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு லிப் பாம் என்கிற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள நயன்தாரா என்ற சாய் வாலே என்ற டீக்கடை பிசினஸிலும் பெருமளவு முதலீடு செய்துள்ளார்.

இப்படி பல தொழில்களை செய்து வரும் நயன்தாரா தற்போது சென்னையில் ஒரு தியேட்டரை சொந்தமாக வாங்கியுள்ளார். அதன்படி வடசென்னை பகுதியில் இயங்கி வந்த பழமையான அகஸ்தியா தியேட்டரை நடிகை நயன்தாரா வாங்கியுள்ளாராம். இந்த இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றினை கட்டுவதற்கு நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக தியேட்டர் வாங்கியுள்ள நயன்தாராவுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.