விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடேசனை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் வெங்கடேசன் தப்பி ஓடினார். ஆனாலும் அவர்கள் விடாமல் துரத்தி சென்று வெங்கடேசனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் படுகாயமடைந்த வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வெங்கடேசனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.