கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாக குப்பம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பிள்ளை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 20 வருடமாக ராமருக்கும் அவரது மாமியார் குடும்பத்தினருக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லை.

இந்நிலையில் ராமரின் மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் சின்னப்பிள்ளை தனது தாயின் கரும காரியத்திற்கு செல்ல வேண்டும் என தனது கணவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தனது கணவரிடம் சொல்லாமல் சின்ன பிள்ளை தன் பிறந்த ஊரான நல்லாத்தூர் கிராமத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன்பிறகு வீட்டிற்கு வந்த சின்னப் பிள்ளைக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ராமர் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சின்ன பிள்ளை பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.