ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் பெண்கள் பெட்டியில் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் லட்சுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் லட்சுமியை மிரட்டி அவரிடம் இருந்த 1000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டார்.

மேலும் லட்சுமியின் கையை கத்தியால் வெட்டி அந்த நபர் அவரது காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வைத்து லட்சுமியை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.