திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூருக்கு வந்துள்ளார். அவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டினா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பூபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.