ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயம்பு தோட்டம் பகுதியில் தாண்டவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குதிரைகள் மேடு கதவணை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருகின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாண்டவம் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் தனது மனைவி வேலைக்கு சென்ற பிறகு தாண்டவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாண்டவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.