செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு….  அதிலே ஒரு பில் மிக முக்கியமான பில்…. எடப்பாடி பழனிசாமி எவ்வளவு ஒரு மோசமான அரசியல்வாதி என்பதற்கு அது ஒன்றுதான் எடுத்துக்காட்டு… என்னன்னு கேட்டீங்கன்னா….

2020 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலே மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது… பழனிசாமியும் அந்த கூடாரமும் பெருசா அம்மா அம்மானு பேசுகிறார்கள். அங்க இருக்க ஆட்கள் யாராவது  அந்த பில் கவர்னர் பெண்டிங்ல வச்சிருக்காருன்னு என்னைக்காவது ஆளுநரை சந்தித்தது உண்டா பழனிசாமி ?

என்றாவது   பேசியது உண்டா பழனிசாமி ?  அம்மாவுக்கு தெரியாது…. உயிரோட அம்மா வந்துட்டா கூட எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு  உங்கள. நீங்க எங்க இங்க வந்தீங்க….  எங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கு ? நாங்க கொள்ளை அடிச்சுட்டு சவுரியமா நாட்டில் இருக்கின்றோம் என்ற நிலைமையில் தான் பழனிசாமியும்,  அந்த கூட்டமும் இருக்கிறது. ஒருத்தர் கூட கேட்கலை என தெரிவித்தார்.