நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தற்போது மழை குறையாத காரணத்தால் தொடர்ச்சியாக விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்ட மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் 11ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.