நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரி, நாராயணசாமி, தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.