நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

அந்த தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்தது. இதனால் பசுமாடு அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நவீன கருவிகளை பயன்படுத்தி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.