திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளானந்தல் புதூர் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டடிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சக்தி மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி ஒரு காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனையடுத்து படுகாயமடைந்த சக்தி மற்றும் மற்றொரு காளையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.