திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வத்தலகுண்டு கொடைக்கானல் மலை பாதையில் ஊத்து அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சுதர்சனும், அவரது நண்பரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு மலை பாதையில் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.