திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.