தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோபால்(85) என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 18-ஆம் தேதி கோபால் மொரப்பூர் கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.