தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாதேரி பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் உயிரிழந்தார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். கடந்த 16-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தமிழ் செல்வன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் குடும்பத்தினர் தமிழ்ச்செல்வனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். கடந்த 20-ஆம் தேதி நாசன் கொட்டாய் பகுதியில் இருக்கும் கிணற்றில் தமிழ்ச்செல்வன் சடலமாக கிடந்துள்ளான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்செல்வனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.