கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வெங்கட்ராவ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வெங்கட்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.