அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி குறித்து அவதூறாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறுமிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.