2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும் என்றும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

புனே ஐஐடி-ன் வானிலை ஆய்வாளர் ராக்ஸி மேத்யூ இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார். கடலில் 2000 மீட்டர் ஆழம் வரை வெப்பத்தின் தாக்கம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.