சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கர்நாடகா பாகல்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.