சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.