பிரபல பங்குச்சந்தை நிபுணர் மற்றும் வர்த்தகரான பி.ஆர். சுந்தர் பெங்களூரில் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பதியப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்கு தற்போது சமூக வலைதளங்களிலும் வர்த்தக வட்டாரத்திலும் பெரும் தீயாய் பரவி வருகிறது.

பங்குச்சந்தை மற்றும் நிதிசார் வர்த்தகத் துறையில் பரீட்சையமான பி.ஆர். சுந்தர், பாலியல் தொடர்பான புகாரின் அடிப்படையில் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் சென்னை நகரின் மையப்பகுதியில் பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கிச் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்த பலரை அவர் முன்பே பிளாக் செய்திருந்த நிலையில், தற்போது எழுந்துள்ள இந்தச் சட்டரீதியான கைது நடவடிக்கையை அவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

நிதி மற்றும் வர்த்தகத் துறையில் செல்வாக்குடன் வலம் வந்த பிரபலத்தின் மீது பதியப்பட்டுள்ள இந்த கிரிமினல் வழக்கு, பொதுவெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.