விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு மடியில் கனம் இல்லை.  வழியில் எங்களுக்கு பயம் இல்லை. உன்னை மாதிரி 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சுரண்டி, கொள்ளை, அடித்து வைக்கவில்லை  நாங்கள்…  இன்னைக்கு என்ன நடக்குது ?

எந்த பத்திரிக்கையாவது போட்டதா ? சும்மா…  அண்ணா திமுகவுல எவனாவது குசு விட்டால் கூட TVல்  நாலு பேரு பேச உட்கார்ந்து கொள்வார்கள்.  ஆனால் இன்னைக்கு 10, 15 நாளாக   தமிழ்நாட்டில் மணல் கொள்ளை,  ED ரெய்டு நடந்திகிட்டு இருக்கு. எந்த டிவிலையாவது விவாதம் பண்றாங்களா ? அதெல்லாம் அவுங்க கண்ணுக்கு தெரியாது. இன்னைக்கு தவறு நடந்திருக்கிறது என்பதை நான் சொல்லல. நீர்வளத் துறையின் உடைய தலைமை பொறியாளர்…

அனைத்து மாவட்டத்திலும் எங்கெல்லாம் மணல் எடுக்கிறதோ,  அந்த துறையினுடைய பொறியாளர் சொல்லி இருக்கின்ற. எங்கெல்லாம் நடந்ததோ,  அனைத்தையும் உண்மையை சொல்லிடுங்க. உண்மையை  EDகிட்ட சொல்லுங்க. ED நெருங்கிட்டான். கைது பண்ண போறான்.  யார் யார் உள்ள போறாங்கன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் நாங்க பயந்தவங்க கிடையாது. பண்ணி பாரு ? வந்துருச்சு… கிட்ட வந்துருச்சு…. இன்னும் கொஞ்சம் தான்..  டிசம்பர் தாண்டியதும் போய்விடுவார்கள்….  பயந்து தொடை நடுங்கி போயிருவாங்க. எந்த இரவுக்கு போலீஸ் வரும்போமோ, சிபிஐ வருமோ அப்படின்னு எங்கள பாத்து சொல்லுறாங்க.. நாங்க எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோம் என விமர்சனம் செய்தார்.