தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது மற்றும், கூடுதல் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சில நாட்கள் முன்னதாக இதே கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது