விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு மடியில் கனம் இல்லை.  வழியில் எங்களுக்கு பயம் இல்லை. உன்னை மாதிரி 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சுரண்டி, கொள்ளை, அடித்து வைக்கவில்லை  நாங்கள்…  இன்னைக்கு என்ன நடக்குது ?

எந்த பத்திரிக்கையாவது போட்டதா ? சும்மா…  அண்ணா திமுகவுல எவனாவது குசு விட்டால் கூட TVல்  நாலு பேரு பேச உட்கார்ந்து கொள்வார்கள்.  ஆனால் இன்னைக்கு 10, 15 நாளாக   தமிழ்நாட்டில் மணல் கொள்ளை,  ED ரெய்டு நடந்திகிட்டு இருக்கு. எந்த டிவிலையாவது விவாதம் பண்றாங்களா ? அதெல்லாம் அவுங்க கண்ணுக்கு தெரியாது. இன்னைக்கு தவறு நடந்திருக்கிறது என்பதை நான் சொல்லல. நீர்வளத் துறையின் உடைய தலைமை பொறியாளர்…

அனைத்து மாவட்டத்திலும் எங்கெல்லாம் மணல் எடுக்கிறதோ,  அந்த துறையினுடைய பொறியாளர் சொல்லி இருக்கின்ற. எங்கெல்லாம் நடந்ததோ,  அனைத்தையும் உண்மையை சொல்லிடுங்க. உண்மையை  EDகிட்ட சொல்லுங்க. ED நெருங்கிட்டான். கைது பண்ண போறான்

தமிழகத்தை பொறுத்தவரை…. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில்….  யார் மத்தியிலே ஆள வேண்டும்…  ஆள வர வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை அல்ல.  எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். காங்கிரசும் அதே மட்டை தான்.

பிஜேபியும் அதே தான். யாரும் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் இதுவரை செய்ததே கிடையாது. காங்கிரஸ் ஆகட்டும்,  பாரதிய ஜனதா ஆகட்டும்… தமிழ்நாட்டினுடைய உரிமை என்று வரும்போது காவேரி பிரச்சினையாகட்டும்…. நீதிமன்றத்திலே போராடி தான் நம்முடைய உரிமையை பெற்றிருக்கின்றோம்.

காங்கிரஸ் உதவி செய்யல,   பாரதிய ஜனதா உதவி செயல. அன்னைக்கு இன்னைக்கு பேசுவாங்க நடை பயணம்… அந்த பயணம்… நான் தமிழ் தமிழின்னு பேசுவாங்க.. அனால்  அங்கு ஹிந்தி வளர்ப்பாங்க என தெரிவித்தார்.