தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் சார்ந்த வினாடி வினா போட்டிகள் இணைய வழியில் நவம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த மாநில மதிப்பீட்டு புலம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆன மாணவர்களின் திறன் சார்ந்த மதிப்பீட்டை அறிய வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான வினாடி வினா போட்டிகள் நவம்பர் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.