மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதற்குட்பட்ட பகுதிகளான சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் கிளிட்டரா ஸ்கூல், மேலகால், தாராப்பட்டி, கச்சராயிருப்பு, கீழமட்டையான், மேல மடையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலகால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, மண்ணாடிமங்கலம், அயப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.