சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பு தேஜா என்பவர் வசித்து வருகிறார் இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தேஜா கல்லூரியில் இருக்கும் கேண்டீனில் தனது நண்பர் சந்தோஷுடன் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அமைந்தகரையை சேர்ந்த தஷ்வந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தஷ்வந்துக்கும், தேஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த தஷ்வந்த் கல்லால் தேஜாவின் தலையில் ஓங்கி அடித்ததால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தேஜாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.