சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்கட்டளையில் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.

அந்த புகாரில் வெளிநாடுகளுக்கு போலியான கொரோனா மருந்தை சப்ளை செய்து கணவன், மனைவி இருவரும் 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிஹர சுப்பிரமணியன், காஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.