கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். அப்போது ராஜேந்திரன் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ராஜேந்திரனிடம் இருந்த 800 ரூபாயை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்த குற்றத்திற்காக சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், சூர்யா ஆகிய இருவரை கைது செய்தனர்.