மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி, விசாரணை நடத்த அங்குள்ள சிறைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளுக்கான உணவு பொருட்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், பொறுப்பு கண்காணிப்பாளர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கை சிறை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.