மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம்.  தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972ல் அக்டோபர் 17ஆம் தேதி கழகத்தை தோற்றுவித்தார்.

இன்றைக்கு கழகத்துக்கு பொன்விழா கொண்டாடி 51 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டு காலத்திலே 31 ஆண்டு காலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அண்ணா திமுக கட்சி. இந்த 31 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்தான் இந்த தமிழகம் ஏற்றம் பெற்றது. கடை கோட்டில் இருக்கின்ற சாமானியனுக்கு கூட நன்மை கிடைக்கப் பெற்றது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக செயல்படுத்தி காட்டிய அரசு அண்ணா திமுக அரசாங்கம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது. ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன்.எந்த பிரதிபலனும் பார்க்காமல் கழகம் அறிவித்தவுடன் சொந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு கழகம் தான் பெரிது.

கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் ஏற்று வந்திருக்கிறீர்கள். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் என்று சொன்னாலே பெருமை.  அந்த பெருமைக்குரியவர்கள் என் முன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என தெரிவித்தார்.