கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,

காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழக டிஜிபியிடம்  அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், ஆட்சியில் அமர்ந்த 2 ஆண்டு காலத்தில் நீட் குறித்து யாரை சந்தித்து உள்ளார்கள் ??

அதிமுக ஒரு இமயம், திமுக போன்று கொத்தடிமை கிடையாது, தமிழகத்திற்கு இதுவரையில் என்ன செய்துள்ளார்கள், கச்ச தீவு என்றாலே திமுகவினர் ஓடிவிடுவார்கள், பணத்தை நோக்கிய என்னம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது,கருணாநிதி மற்றும் ஸ்டாலின்  விட்டு கொடுக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்டு எடுத்கும் இயக்கம் தான் அதிமுக என தெரிவித்தார் .