திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் எஸ்.தும்மலப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அமலா ராணி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் வீரிய காளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.