கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.

அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசுப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் காவலர்கள் கலவரக்காரர்கள் போல் செயல்பட அவர்கள் மீது ட்ரோன்கள் கண்ணீர் புகை குண்டை வீசியது. மேலும் இந்த ட்ரோன்களால் காவல்துறையில் வருங்காலத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.