சென்னை கேகே நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடிகள் பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாஜகவின் பி. டீமாக செயல்பட்டு திமுகவின் ஓட்டை நாம் தமிழர் கட்சி இருப்பதாக வந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சீமான் கூறியதாவது, நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் கிடையாது. நாட்டை பிடிக்க வந்த ஆள். ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு நான் தான் காரணம். நான் மட்டும் இல்லை என்றால் திமுக என்று ஆட்சிக்கு வந்திருக்காது. அதற்காக நான் திமுகவின் பி.டீம் ஆகி விடுவேனா. அரசியலில் நான்தான் ராஜா. நான் தான் நம்பர் ஒன் என்று பெருமிதத்தோடு சீமான் கூறினார்.