அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில் தற்போது போட்டியின்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 220 பேர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேறு யார் பெயரிலும் விருப்ப மனு கூட பெறப்படாததால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.