திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து பார்த்து திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.