ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது. இதனை பார்த்த கார் டிரைவர் சடன் பிரேக் பிடித்ததால் யானை பிளிறியது.

சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, இனிவரும் இரண்டு மாதங்களுக்கு காட்டு யானைகள் தண்ணீருக்காக சாலையை அடிக்கடி கடந்து செல்லும். இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும் என கூறியுள்ளனர்.