கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.

இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். கடுமையான குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.