ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினி பேட்டை பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரை இயக்கி சிறிது தூரம் ஓட்டி சென்றார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். முன்னதாக காரில் இருந்த நபர்கள் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.